கோலா சிலாங்கூர், ஜூலை 15-
பெர்சத்து- கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் தொகுதிகளை காலி செய்வதற்கு அனுமதி மறுத்து இருக்கும் சபாநாயகர்களின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று அக்கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.
6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளை காலி செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்க அனுமதி மறுத்து இருக்கும் மக்களவை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் மற்றும் ஒரு சட்டமன்றத்தை காலி செய்வது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அறிவிக்காமல் இருக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபா நாயகர் லாவ் வெங் சான் ஆகியோரின் முடிவை எதிர்த்து இந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அஸ்மின் அலி தெரிவித்தார்.
இவ்விரு சபாநாயகர்களின் முடிவுகளும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மாநில அரசியலமைப்புச்சட்டம் ஆகியவற்றுக்கு முரணானதாகும் என்று அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.








