May 20, 2026
Thisaigal NewsYouTube
மீன் விற்பனையாளர் இன்னும் சுதந்திரமாகத்தான் இருக்கிறார்
தற்போதைய செய்திகள்

மீன் விற்பனையாளர் இன்னும் சுதந்திரமாகத்தான் இருக்கிறார்

Share:

பஃபர் மீன் எனப்படும் ஊது மீனை உண்டப்பின்னர் தங்களின் தாயாரும், தந்தையும் மரணமடைந்த சம்பவம் குறித்து, அரசாங்கம் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கைவிடுத்துள்ள வேளையில், அதில் சம்பந்தப்பட்டுள்ள மீன் விற்பனையாளர் இன்னும் சுதந்திரமாக மீன்களை விற்றுக்கொண்டு இருக்கிறார் என்பது பெறும் ஏமாற்றத்தை அளிப்பதாக பெற்றோரை இழந்துள்ள 51 வயது மாது ங ஐ லீ வருத்தம் தெரிவித்துள்ளார்.

அந்த மீன் விற்பனையாளர் மீது குளுவாங் மாவட்ட சுகாதார அலுவலகத்திடமும், மலேசிய சுகாதார அமைச்சகத்திடமும் புகார் அளித்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அந்நபர் இன்னும் முகநூல் பக்கத்தில் மின்களை விற்பனை செய்துக்கொண்டிருப்பது நியாயமற்றது என்று ங ஐ லீ விவரித்தார்.

இந்த நச்சு மீனை விநியோகித்த தரப்பினருக்கு எதிராக 1972 ஆம் ஆண்டு மலேசிய மீன் வளத்துறை மேம்பாட்டு வாரிய சட்டம் மற்றும் 1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமது பெற்றோரை இழந்துள்ள ஜொகூர் , ஸ்கூடாய், கம்போங் சாமேக்கைச் சேர்ந்த ங ஐ லீ கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு