லாரி பழுதுபார்க்கும் பட்டறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி, 68 வயதுடைய முதியவர் ஒருவர் 60 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குவந்தான, புக்கிட் செத்தோங்கோலில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பட்டறை 70 விழுக்காடு சேதமுற்ற நலையில், அதன் உரிமையாளர் மூச்சுச்திணறலுக்கு ஆளான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 35 வீரர்கள் பல நிலையங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு, தீணை அணைக்கும் பணியில் துரிதமாகச் செயல்பட்டனர். மூச்சுத்திணறல் காரணமாக, முதியவருக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.








