May 18, 2026
Thisaigal NewsYouTube
மூன்று தரை வீடுகள் தீயில் சேதம்
தற்போதைய செய்திகள்

மூன்று தரை வீடுகள் தீயில் சேதம்

Share:

செபராங் பிறை, ஜூன்.24-

பினாங்கு, தாமான் தாசேக் குளுகோர் உத்தாமாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று தரை வீடுகள் கடுமையாகச் சேதமுற்றன. எனினும் அதிர்ஷ்டவசமாக எந்தவோர் உயிருடற் சேதமும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

இத்தீ விபத்து குறித்து அதிகாலை 4.52 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப் படை உதவி இயக்குநர் ஜோன் சகூன் தெரிவித்தார்.

தீயணைப்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்த போது அந்த மூன்று வீடுகளிலும் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததாகவும், இதில் ஐந்து கார்களும், நான்கு மோட்டார் சைக்கிள்களும் சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

தீ மற்ற வீடுகளுக்குப் பரவாமல் தடுக்க முழு வீச்சில் அணைக்கப்பட்டது. தீ ஏற்பட்டதற்கானக் காரணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக ஜோன் சகூன் தெரிவித்தார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை