Mar 15, 2026
Thisaigal NewsYouTube
பூனையை வன்புணர்வு செய்த ஆடவருக்கு 40,000 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

பூனையை வன்புணர்வு செய்த ஆடவருக்கு 40,000 ரிங்கிட் அபராதம்

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.11-

பூனையை வன்புணர்வு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நேபாள ஆடவருக்கு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 40 ஆயிரம் ரிங்கிட் அபராதமும், அதனைச் செலுத்தத் தவறினால் 15 மாதச் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அர்மான் ஷா என்ற அந்த 43 வயது ஆடவர், நீதிபதி நோர் ஹாஸ்னியா அப்துல் முன்னிலையில், பூனையை வதை செய்த குற்றச்சாட்டில் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

முன்னாள் பாதுகாவலரான அவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கோத்தா கெமுனிங்கிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விலங்குகள் நலச் சட்டம் 2015, பிரிவு 29(1)(a)-ன் கீழ், இவ்வழக்கானது பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

பொது இடத்தில் அரை நிர்வாணமாக இருந்தது, முறையான ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அர்மான் ஷா ஏற்கனவே கடந்த 4 மாதங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்