கோலாலம்பூர், மார்ச்.12-
மலேசியாவில் முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அந்நிய நாட்டவர்களுக்கு வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து முதலீட்டாளர் பாஸ் அட்டையை உள்துறை அமைச்சு அறிமுகப்படுத்தவிருப்பதாக அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள், குடிநுழைவுத்துறை தொடர்பான அலுவல்களைச் சுலபமாக்கும் பொருட்டு இந்த சிறப்பு அட்டை அறிமுகப்படுத்தவிருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.
மலேசியாவில் உள்ள முதலீட்டு ஏஜென்சிகளின் வாயிலாக முதலீடு செய்வதற்கு ஏதுவாக அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பொருட்டு இந்த சிறப்பு பாஸ் அட்டை பெரிதும் உதவும் என அமைச்சர் சைபுடின் குறிப்பிட்டார்.








