May 6, 2026
Thisaigal NewsYouTube
சூரி நருடின் கொலை வழக்கு: 51 வயது ஆடவர் மீது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சூரி நருடின் கொலை வழக்கு: 51 வயது ஆடவர் மீது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

Share:

தம்பின், டிசம்பர்.26-

இம்மாதத் தொடக்கத்தில், 53 வயதான சூரி நருடின் கொலை செய்யப்பட்டு, பையில் அடைக்கப்பட்ட வழக்கில், 51 வயது ஆடவர் மீது தம்பின் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ரெட்ஸா அஸார் ரெஸாலி முன்னிலையில் இன்று வாசிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை ஸைனிஸான் ஸைனால் என்ற அந்த ஆடவர் ஒப்புக் கொண்டார்.

என்றாலும், கொலை வழக்கானது, உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், இவ்வழக்கில் குற்ற ஒப்புதல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த டிசம்பர் 7 முதல் 18-ஆம் தேதிக்கு இடையில், நெகிரி செம்பிலான், ஜாலான் பெசார் - லிங்கி அருகிலுள்ள வீட்டின் பின்புறம், சூரி நருடினைக் கொலை செய்தாக அந்த ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இக்கொலைக் குற்றமானது நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனையோ அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையோ விதிக்கப்படலாம்.

தடயவியல் அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதால், இவ்வழக்கானது வரும் ஜனவரி 27-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்