Mar 14, 2026
Thisaigal NewsYouTube
சூரி நருடின் கொலை வழக்கு: 51 வயது ஆடவர் மீது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சூரி நருடின் கொலை வழக்கு: 51 வயது ஆடவர் மீது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

Share:

தம்பின், டிசம்பர்.26-

இம்மாதத் தொடக்கத்தில், 53 வயதான சூரி நருடின் கொலை செய்யப்பட்டு, பையில் அடைக்கப்பட்ட வழக்கில், 51 வயது ஆடவர் மீது தம்பின் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ரெட்ஸா அஸார் ரெஸாலி முன்னிலையில் இன்று வாசிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை ஸைனிஸான் ஸைனால் என்ற அந்த ஆடவர் ஒப்புக் கொண்டார்.

என்றாலும், கொலை வழக்கானது, உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், இவ்வழக்கில் குற்ற ஒப்புதல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த டிசம்பர் 7 முதல் 18-ஆம் தேதிக்கு இடையில், நெகிரி செம்பிலான், ஜாலான் பெசார் - லிங்கி அருகிலுள்ள வீட்டின் பின்புறம், சூரி நருடினைக் கொலை செய்தாக அந்த ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இக்கொலைக் குற்றமானது நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனையோ அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையோ விதிக்கப்படலாம்.

தடயவியல் அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதால், இவ்வழக்கானது வரும் ஜனவரி 27-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து