ஜாலான் சுல்தாம் இப்ராஹும் - மில் உள்ள எரிவாயு நிலையத்தின் முன் பெண் ஒருவர் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது.
இச்சம்பவம் நேற்று மதியம் 3:19 மணியளவில் ஜாலான் சைனால் அபிடின் - லிருந்து ஜாலான் சுல்தாம் இப்ராஹும் - மிற்கு அப்பெண் பயணித்த போது நடந்ததாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட்ரொஸ்டி டாவுட் தெரிவித்தார்.
பெரோடுவா மைவி வாகன ஓட்டுநர் சுயநினைவின்றி இருந்ததாகவும் தீடீர் மரணத்தினால் இறந்துள்ளதாகவும் முஹமாட் ரொஸ்டி குறிப்பிட்டார்.
சவ பரிசோதனைக்கு அப்பெண்ணின் உடல் ராஜா பெரெம்புவான் சைனாப் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அவர் விவரித்தார்.








