Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத உறைந்த இறைச்சியும் உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

Share:

கிள்ளான் துறைமுகம், ஜன.24-

மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத உறைந்த இறைச்சியையும் உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கோழி, ஆடு, வாத்து, தவளை இறைச்சி உட்பட பல்வேறு உறைந்த உணவுகள் மேற்கு துறைமுகங்களிலும் வடக்கு துறைமுகங்களிலும் கைப்பற்றப்பட்டன. இந்த பொருட்கள் சரியான இறக்குமதி அனுமதி இல்லாமல் தவறான ஆவணங்களுடன் இறக்குமதி செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மத்திய வட்டார சுங்கத்துறையின் உதவி இயக்குநர் நொர்லேலா இஸ்மாயில் குறிப்பிட்டார்.

மேலும் மற்றொரு வழக்கில் 1.69 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 9.7 கிலோகிராம் சட்டவிரோத புகையிலையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த புகையிலை பொருட்களும் உணவு, பானங்கள் என்று தவறாக அறிவிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இரண்டு வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் மீது சுங்கச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி