கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 3 அடுக்கு துப்பாக்கித் தோட்டாக்கள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓர் அமெரிக்கப் பிரஜையை போலீசார் கைது செய்தனர். அந்த ஆடவர் நேற்று வெள்ளிக்கிழமை KLIA 1 இல் பிடிபட்டதை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுஸ்செயின் ஒமார் கான் உறுதிபடுத்தினார்.
இராணுவ சலுகையைப் பயன்படுத்தி, நாட்டிற்குள் சுற்றுலாப் பயணியாக நுழைந்த அந்த அமெரிக்கப்பிரஜை, 1960 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹுஸ்செயின் ஒமார் குறிப்பிட்டார். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, மேல் நடவடிக்கைக்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஹுஸ்செயின் ஒமார் மேலும் விவரித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


