கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 3 அடுக்கு துப்பாக்கித் தோட்டாக்கள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓர் அமெரிக்கப் பிரஜையை போலீசார் கைது செய்தனர். அந்த ஆடவர் நேற்று வெள்ளிக்கிழமை KLIA 1 இல் பிடிபட்டதை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுஸ்செயின் ஒமார் கான் உறுதிபடுத்தினார்.
இராணுவ சலுகையைப் பயன்படுத்தி, நாட்டிற்குள் சுற்றுலாப் பயணியாக நுழைந்த அந்த அமெரிக்கப்பிரஜை, 1960 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹுஸ்செயின் ஒமார் குறிப்பிட்டார். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, மேல் நடவடிக்கைக்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஹுஸ்செயின் ஒமார் மேலும் விவரித்தார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


