Feb 3, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் மேயர் தேர்தலை வைத்து சர்ச்சையைக் கிளப்ப வேண்டாம் - அந்தோணி லோக் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மேயர் தேர்தலை வைத்து சர்ச்சையைக் கிளப்ப வேண்டாம் - அந்தோணி லோக் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.03-

கோலாலம்பூர் மேயர் பதவிக்கான சாத்தியமான தேர்தல்கள் குறித்த ஓர் ஆய்வை முன்வைத்து, தேவையற்ற சர்ச்சையை உருவாக்க வேண்டாம் என போக்குவரத்துறை அமைச்சரும், ஜசெக கட்சியின் பொதுச் செயலாளருமான அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அது வெறும் ஆய்வு மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள அவர், மேயர் தேர்தல் குறித்த நன்மை, தீமைகள் குறித்து விவாதிக்க அந்த ஆய்வு வழிவகை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

பல வளர்ந்த மற்றும் ஜனநாயக நாடுகளிலும் மேயர் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ள லோக், இந்த பரிந்துரையை ஜசெக மட்டுமின்றி, மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இதனை முன்மொழிந்ததைச் சுட்டிக் காட்டினார்.

முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீனும் சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில் இந்த யோசனையை முன்மொழிந்திருந்தார்.

அண்மையில், கோலாலம்பூர் மாநகர் மன்ற ஊராட்சி தேர்தல் எனப்படும் மேயர் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தனது அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

மோட்டார் சைக்கிள் விபத்து: கழிவு நீர் குழிக்குள் விழுந்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்து: கழிவு நீர் குழிக்குள் விழுந்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு

மாமன்னரைச் சந்தித்த பிரதமர் துறை அமைச்சர் ஸுல்கிஃப்லி: சமய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்

மாமன்னரைச் சந்தித்த பிரதமர் துறை அமைச்சர் ஸுல்கிஃப்லி: சமய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்

யாயாசான் அகால்பூடி ஊழல் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி ஸாஹிட் மனுத் தாக்கல்: வழக்கானது பிப்வரி 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

யாயாசான் அகால்பூடி ஊழல் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி ஸாஹிட் மனுத் தாக்கல்: வழக்கானது பிப்வரி 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

அலோர் காஜாவில் 6 வயது சிறுவன் வெந்நீர் ஊற்றுக் குளத்தில் மூழ்கி பலி

அலோர் காஜாவில் 6 வயது சிறுவன் வெந்நீர் ஊற்றுக் குளத்தில் மூழ்கி பலி

கோலாலம்பூரில் 'Sojul Gang' எனப்படும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூரில் 'Sojul Gang' எனப்படும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் கும்பல் முறியடிப்பு

அரச  மன்னிப்பு என்பது 'பரிசு' அல்ல; அது ஒரு அரசியலமைப்பு நடைமுறை - பகாங் சுல்தான் விளக்கம்

அரச மன்னிப்பு என்பது 'பரிசு' அல்ல; அது ஒரு அரசியலமைப்பு நடைமுறை - பகாங் சுல்தான் விளக்கம்