17 வயது இடைநிலைப்பள்ளி மாணவன் ஒருவன், 40 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருளுடன் பிடிபட்டதாக கிளந்தான், பாசீர் புத்தே மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஸுல் ரிஸால் ஸகாரியா தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கம்போங் லெம்பா செமேராக்கில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அந்த ஐந்தாம் படிவ மாணவனிடம் 74.80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிடிபட்டதாக ஸைஸுல் குறிப்பிட்டார்.
போலீசாரைக் கண்டதும் Yamaha Y15ZR ரக மோட்டார் சைக்கிளில் அந்த மாணவன் தப்பிக்க முற்பட்ட போது, போதைப்பொருள் துடைத்தொழிப்பு போலீஸ் குழு அந்த மாணவனை வளைத்துப் பிடித்ததாக அவர் தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


