அலோர் காஜா, ஜூன் 22-
டிரெய்லர் லோரியினால் மோதப்பட்ட 7 மாடுகள், சம்பவம் இடத்திலேயே மாண்டன. இச்சம்பவம் இன்று அதிகாலை 5.10 மணியளவில் மலாக்கா, அலோர் காஜா, ஜாலான் சேரனா புத்தேஹ் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இவ்விபத்தில் 33 வயது டிரெய்லர் ஓட்டுநர், எவ்வித காயமின்றி உயிர்தப்பியதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.
அந்த டிரெய்லர் லோரி, அலோர் காஜாவிலிருந்து தாமான் புக்கிட் தம்பின்- னை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாடுகள் சாலையை கடக்க முற்பட்டன. அந்த மாடுகள் மோதப்படுவதை டிரெய்லர் ஒட்டுநரால் தவிர்க்க இயலவில்லை என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாடுகளை மோதியதால் டிரெய்லர் லோரியின் முன்புறம் சேதமுற்றள்ளதாக அவர் மேலும் கூறினார்.








