May 2, 2026
Thisaigal NewsYouTube
வேலை இழக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக 710 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் - அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

வேலை இழக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக 710 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் - அன்வார் அறிவிப்பு

Share:

வேலை இழப்பை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள, நாடு தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக, 710 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட மதிப்பிலான பொருளாதார மீள்திறன் தொகுப்பு அமல்படுத்தப்படும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு திறன் மற்றும் வேலைவாய்ப்புக்கான முன்னேற்ற விரைவு திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

நேற்று கோலாலம்பூர் புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் உரையாற்றிய அன்வார்,தற்போது தொழிலாளர் சந்தை வலுவாக இருந்தாலும் கூட, நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

தொழில்நுட்பங்கள் அதிவேகமாக மாறி வரும் சூழலில், தொழிலாளர்கள் போட்டித்திறனுடன் இருக்க வேண்டும் என்றும், வேலை இழக்கும் நிலை ஏற்பட்டால், தற்போதைய தொழில் துறையின் தேவைகளுக்கு ஏற்ப புதிய திறன்களில் மீள் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொருளாதார நிலைத்தன்மை திட்டம், மனித வள மேம்பாடு மற்றும் தொழிலாளர் சந்தை நிலைத்தன்மைக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News

பிரசவத்திற்குப் பிந்தைய சிறப்பு உதவித்தொகை / 1.32 லட்சம் பெண்கள் பயனடையவார்கள் என அன்வார் அறிவிப்பு

பிரசவத்திற்குப் பிந்தைய சிறப்பு உதவித்தொகை / 1.32 லட்சம் பெண்கள் பயனடையவார்கள் என அன்வார் அறிவிப்பு

2030-குள் குறைந்த பட்ச மாத ஊதியம் 3000 ரிங்கிட்டாக உயர்த்த இலக்கு - அமைச்சர் ரமணன் அறிவிப்பு

2030-குள் குறைந்த பட்ச மாத ஊதியம் 3000 ரிங்கிட்டாக உயர்த்த இலக்கு - அமைச்சர் ரமணன் அறிவிப்பு

எல்லை தாண்டும் மலேசியத் தொழிலாளர்களுக்கு PERKESO காப்பீடு - அன்வார் அறிவிப்பு

எல்லை தாண்டும் மலேசியத் தொழிலாளர்களுக்கு PERKESO காப்பீடு - அன்வார் அறிவிப்பு

அடுத்தாண்டு சித்திரா பௌணர்மி திருவிழாவில் தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணும் - டத்தோ சிவநேசன் தகவல்

அடுத்தாண்டு சித்திரா பௌணர்மி திருவிழாவில் தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணும் - டத்தோ சிவநேசன் தகவல்

தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

கோத்தா பாருவில் 61 குத்துக் காயங்களுடன் பெண் சடலம்: 4 பேருக்கு நீதிமன்றக் காவல்

கோத்தா பாருவில் 61 குத்துக் காயங்களுடன் பெண் சடலம்: 4 பேருக்கு நீதிமன்றக் காவல்