கோலாலம்பூர், ஜூலை 10-
நாட்டில், பொருள் மற்றும் சேவை வரி - GST-க்கு பதிலாக விற்பனை மற்றும் சேவை வரி - SST அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, பயன்பாட்டு அடிப்படையிலான வரி வசூலிப்பு தொகை குறைந்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2018ஆம் ஆண்டு மே மாதம் வரையில், GST வரி வாயிலாக 184.8 பில்லியன் வெள்ளி வருவாய் கிடைத்தது.
அதன் பின்னர், GSTக்கு பதிலாக, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், SST வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, கடந்த 2023ஆம் ஆண்டு வரையில், மொத்தம் 150.4 பில்லியன் வெள்ளி வருவாய் மட்டுமே, நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் நிதியமைச்சு கூறியுள்ளது.








