Jun 15, 2026
Thisaigal NewsYouTube
சையத் சாதிக் வழக்கில் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

சையத் சாதிக் வழக்கில் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும்

Share:

நம்பிக்கை மோசடி உட்பட 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள மூடா கட்சியின் தலைவர் சையத் சாதிக் அப்துல் ரஹ்மானுக்கு எதிரான வழக்கில், தீர்ப்பின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பு மற்றும் எதிர் தரப்பு, தத்தம் வாதத்தொகுப்புகளை முடித்துக்கொண்டதைத் தொடர்ந்து, தீர்ப்புத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி அஸ்ஹார் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.

எனினும், தீர்ப்பை அறிவிக்க நீண்டகாலம் ஆகலாம் என்று எந்தவொரு தரப்பும் அச்சப்பட வேண்டியதில்லை. காரணம், வெகு விரைவில் தீர்ப்பிற்கான தேதி நிர்ணயிக்கப்படும் என்று நீதிபதி இன்று அறிவித்துள்ளார்.

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 10 லட்ச வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்வதில் உடந்தையாக இருந்ததாக மூவார் எம்.பி. யுமான சையத் சாதிக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்