நம்பிக்கை மோசடி உட்பட 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள மூடா கட்சியின் தலைவர் சையத் சாதிக் அப்துல் ரஹ்மானுக்கு எதிரான வழக்கில், தீர்ப்பின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பு மற்றும் எதிர் தரப்பு, தத்தம் வாதத்தொகுப்புகளை முடித்துக்கொண்டதைத் தொடர்ந்து, தீர்ப்புத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி அஸ்ஹார் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.
எனினும், தீர்ப்பை அறிவிக்க நீண்டகாலம் ஆகலாம் என்று எந்தவொரு தரப்பும் அச்சப்பட வேண்டியதில்லை. காரணம், வெகு விரைவில் தீர்ப்பிற்கான தேதி நிர்ணயிக்கப்படும் என்று நீதிபதி இன்று அறிவித்துள்ளார்.
தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 10 லட்ச வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்வதில் உடந்தையாக இருந்ததாக மூவார் எம்.பி. யுமான சையத் சாதிக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


