Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சையத் சாதிக் வழக்கில் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

சையத் சாதிக் வழக்கில் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும்

Share:

நம்பிக்கை மோசடி உட்பட 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள மூடா கட்சியின் தலைவர் சையத் சாதிக் அப்துல் ரஹ்மானுக்கு எதிரான வழக்கில், தீர்ப்பின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பு மற்றும் எதிர் தரப்பு, தத்தம் வாதத்தொகுப்புகளை முடித்துக்கொண்டதைத் தொடர்ந்து, தீர்ப்புத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி அஸ்ஹார் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.

எனினும், தீர்ப்பை அறிவிக்க நீண்டகாலம் ஆகலாம் என்று எந்தவொரு தரப்பும் அச்சப்பட வேண்டியதில்லை. காரணம், வெகு விரைவில் தீர்ப்பிற்கான தேதி நிர்ணயிக்கப்படும் என்று நீதிபதி இன்று அறிவித்துள்ளார்.

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 10 லட்ச வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்வதில் உடந்தையாக இருந்ததாக மூவார் எம்.பி. யுமான சையத் சாதிக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்