நம்பிக்கை மோசடி உட்பட 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள மூடா கட்சியின் தலைவர் சையத் சாதிக் அப்துல் ரஹ்மானுக்கு எதிரான வழக்கில், தீர்ப்பின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பு மற்றும் எதிர் தரப்பு, தத்தம் வாதத்தொகுப்புகளை முடித்துக்கொண்டதைத் தொடர்ந்து, தீர்ப்புத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி அஸ்ஹார் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.
எனினும், தீர்ப்பை அறிவிக்க நீண்டகாலம் ஆகலாம் என்று எந்தவொரு தரப்பும் அச்சப்பட வேண்டியதில்லை. காரணம், வெகு விரைவில் தீர்ப்பிற்கான தேதி நிர்ணயிக்கப்படும் என்று நீதிபதி இன்று அறிவித்துள்ளார்.
தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 10 லட்ச வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்வதில் உடந்தையாக இருந்ததாக மூவார் எம்.பி. யுமான சையத் சாதிக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


