பாரிட் பூந்தர், ஜூலை 2-
SPM தேர்விவில் 10 A பெற்ற அனைத்து மாணவர்களும் மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்றாலும் அதற்கும் குறைவாக 9 A மற்றும் 8 A பெற்ற மாணவர்களும் அந்த கல்வித் திட்டத்தில் இட வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
10 A பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதேவேளையில் அதற்கும் குறைவான அடைவு நிலையைப் பெற்ற மாணவர்களுக்கும் மெட்ரிக்குலோஷன் கல்வித் திட்டத்தில் இடம் கிடைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
எனவே 10 A பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே மெட்ரிக்குலோஷன் கல்வித் திட்டத்தில் இடம் கிடைக்கும் என்று நினைத்து அதற்கு குறைவான அடைவு நிலையைக் கொண்ட மணவர்கள் கவலைக் கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் பத்லினா சிடெக் கேட்டுக்கொண்டார்.








