May 24, 2026
Thisaigal NewsYouTube
பெண்மணி சுட்டுக் கொலை
தற்போதைய செய்திகள்

பெண்மணி சுட்டுக் கொலை

Share:

கெடா,ஜூலை 21-

கெடா, படாங் தெராப், டுரியான் புரூங் அருகே சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படும் பெண்மணியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த மாது 30 வயதான தாய்லாந்து நாட்டவர் என ஐயுறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலை அவ்வழியே சென்ற மக்கள் சாலையோரம் கண்டெடுத்ததாக அறியப்படுகிறது.
சம்பவம் குறித்து நேற்று மாலை ஏழு மணிக்கு அழைப்பை பெற்றதும் போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

அப்பெண்ணின் உடலை கண்டதும் அதில் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்திருந்ததை படாங் தெராப்மா வட்ட போலீஸ் தலைவர் DSP Mulkiaman Manzar உறுதிப்படுத்தினார்.
தடயவியல் சோதனைக்காக அவரின் சடலம் அலோர் செத்தார் Sultanah Bahiyah மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில், கொலையாளி அண்டை நாட்டிற்கு தப்பி ஓடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related News