Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஸ்கேம் மோசடியில் தொடர்புடைய 7 ஐப்பானியர்கள் கைது

Share:

தொலைபேசி ஸ்கேம் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 7 ஜப்பானியர்கள், கோலாலம்பூரில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் உள்ள ஜப்பானிய தூதரகத்திலிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலைத் தொடர்ந்து அந்த 7 ஜப்பானியர்களும் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ ரம்லி முஹமாட் யூசோஃப் தெரிவித்தார.

சம்பந்தப்பட்ட மோசடிக் கும்பல், ஜப்பானியர்களை இலக்காக கொண்டு ஸ்கைப் செயலியை பயன்படுத்தி இந்த தொலைபேசி ஸ்கேம் மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களை வங்கி அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இக்கும்பல், சம்பந்தப்பட்டவர்க்ளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் வங்கி கணக்கு பிரச்னையில் இருப்பதாக கூறி, இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளன.

இவர்கள் பிடிபட்டது மூலம் 11 கைப்பேசிகள், ஒரு கணினி மொடெம், பல்வேறு மின்சார சாதனப்பொருட்களை கொண்ட ஒரு கறுப்பு நெகிழிப்பை, சாவிகள், சுத்தியியல் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு