May 6, 2026
Thisaigal NewsYouTube
தியோ பெங் ஹோக் மரண விவகாரம் ஐ.நா.விற்குக் கொண்டுச் செல்லப்படுகிறது
தற்போதைய செய்திகள்

தியோ பெங் ஹோக் மரண விவகாரம் ஐ.நா.விற்குக் கொண்டுச் செல்லப்படுகிறது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.11-

16 ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்பிஆர்எம் தடுப்புக் காவலில் இருந்த போது, ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணம் அடைந்த தியோ பெங் ஹோக் விவகாரத்தை ஐ.நா.விற்குக் கொண்டுச் செல்வதற்கு அவரின் தங்கை முடிவு செய்துள்ளார்.

தனது அண்ணணின் மரணத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பதை கண்டறியவதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தங்கள் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமைப் பிரிவிற்குக் கொண்டுச் செல்லப் போவதாக தியோ லீ லான் தெரிவித்தார்.

தனது அண்ணனின் மரணம் தொடர்பில் கடந்த ஜுலை மாதம் ஐ.நா.வில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தம்முடைய பயணச் செலவுக்கு இதுவரை 50ஆயிரம் ரிங்கிட்டும், TBH அமைப்பு மூலம் நாடு முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் மூலம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 377 ரிங்கிட்டும் திரட்டப்பட்டு விட்டதாக தியோ லீ லான் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்