லுமூட், டிச. 13-
பேரா, லுமூட், தெலுக் பாத்தேக் கடற்கரையில் முதலை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த அழகிய கடற்கரையில் கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொது மக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அந்த கடற்பகுதியில் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் அந்த கடற்கரையில் ஆங்காங்கு சிவப்புக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.








