Jul 14, 2026
Thisaigal NewsYouTube
நிதி மோசடி: முன்னாள் அரசு ஊழியர் 4 நாள் தடுப்புக் காவலில்
தற்போதைய செய்திகள்

நிதி மோசடி: முன்னாள் அரசு ஊழியர் 4 நாள் தடுப்புக் காவலில்

Share:

சுமார் RM300,000 நிதி உதவித் திட்டத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டில், முன்னாள் அரசு ஊழியர் ஒருவரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று கைது செய்யப்பட்ட அவர், 11 பேரின் தனிப்பட்ட விவரங்களை அனுமதியின்றிப் பயன்படுத்தி, மாதந்தோறும் RM500 முதல் RM1,000 வரை முறைகேடாகப் பெற்று வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

2009-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் பிரிவு 18-இன் கீழ் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM-மின் கோலாலம்பூர் இயக்குநர் முகமது ஜக்குவான் தாலிப் உறுதிப்படுத்தினார்.

Related News