ஜோகூர் மாநிலத்தில் உள்ள பாரஸ்ட் சிட்டி-இல் இயங்கும் நெட்வொர்க் பள்ளி செயல்பாடுகள் மற்றும் அங்குள்ள வெளிநாட்டு நபர்கள் மலேசியாவிற்குள் நுழைய இரண்டாவது கடப்பிதழைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து உள்துறை அமைச்சு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பொதுமக்களின் கவலை மற்றும் ஜோகூர் மாநில அரசின் கோரிக்கையைத் தொடர்ந்து, குடிநுழைவுத் துறை மற்றும் போலீஸ் மூலமாக இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பாரஸ்ட் சிட்டி-இல் உள்ள நெட்வொர்க் பள்ளி l திட்டமானது இஸ்ரேல் தொடர்புடைய வர்த்தகர்களை ஈர்ப்பதாகச் சமூக ஊடகங்களில் எழுந்த சர்ச்சையை அடுத்து, ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாபிஸ் காசி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதிக்கும் வகையில் குடிநுழைவுச் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது மடானி அரசாங்கம் எவ்வித சமரசமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கும் என உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.








