ஜூலை 28-
BRICS கூட்டமைப்பில் இணைய மலேசியா விண்ணப்பம் செய்துள்ளதாக பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM அறிவித்துள்ளார்.
BRICS கூட்டமைப்பில் மலேசியா இணைவதற்குரிய விண்ணப்பம் குறித்து, இன்று, கோலாலம்பூர் KOMPLEKS SERI PERDANA-வில் நடைபெற்ற ரஷ்ய நாட்டு வெளியுறவு அமைச்சர் SERGEY LAVROV உடனான சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், BRICS கூட்டமைப்பில் இணைவதன் மூலம் மலேசிய பல்வேறான துறைகளின் முதலீடு, தொழிற்துறை ஆகியவற்றில் வளர்ச்சிக் கொண்டுள்ள உறுப்பு நாடுகளுடன் அணுக்கமாக செயல்பட முடியும் என்றும் பிரதமர் தெளிவுப்படுத்தியுள்ளார்.








