Aug 5, 2026
Thisaigal NewsYouTube
அந்நிய ஆடவர் மரணம், போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

அந்நிய ஆடவர் மரணம், போலீஸ் விசாரணை

Share:

ஷா ஆலாம், நவ. 25-


கடந்த சனிக்கிழமை,சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முதலாவது முனையத்தில் அவேசமாக நடந்துகொண்டதுடன் பெரும் ரகளையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட ஆடவர், இறந்தது தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமான் கான் தெரிவித்தார்.

போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டு இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் பிற்பகல் 1.30 மணியளவில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திலிருந்து தாய்லாந்து, புக்கேட் தீவுக்கு செல்லும் வழியில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் டிரான்ஸிட் பயணியாக வந்திறங்கிய அந்த அந்நிய ஆடவர் விமான நிலையத்தில் ஆவண சோதனையின் போது பெரும் ரகளைப் புரிந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் நிலையத்தில் இரண்டு போலீஸ்காரர்களை தாக்கியதுடன் அந்த நபரும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அந்த அந்நிய ஆடவரின் இறப்பை திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ஹுசேன் ஒமார் தெரிவித்தார்.

Related News

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்

பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்

பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்

பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை

பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை

சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை

சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது

பள்ளிகளில் இலவசக் காலை உணவு: வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க 'மூடா' கோரிக்கை

பள்ளிகளில் இலவசக் காலை உணவு: வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க 'மூடா' கோரிக்கை