Mar 27, 2026
Thisaigal NewsYouTube
கண் அயர்ந்ததால் விபத்து ஆடவர் விபத்துக்குள்ளானார்
தற்போதைய செய்திகள்

கண் அயர்ந்ததால் விபத்து ஆடவர் விபத்துக்குள்ளானார்

Share:

மலாக்கா,செப்டம்பர் 11-

மலாக்காவில் இன்று அதிகாலையில் வாகனமோட்டி ஒருவர் சில நொடிகள், கண் அயர்ந்து விட்டதால், அவர் செலுத்திய Perodua Myvi கார், மேம்பாலத்தின் சாலைத்தடுப்பை மோதி, 30 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தது. இதில் அந்த ஓட்டுநர் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மலாக்கா, சையத் அப்துல் அஜீஸ் மேம்பாலத்தில் நிகழ்ந்தது. தனியொரு நபராக அக்காரை செலுத்திய அந்த ஆடவர், காருடன் மேம்பாலத்திலிருந்து விழுந்ததில் உடல் மற்றும் கால்களில் பலத்த காயங்களுக்கு ஆளானார்.

மலாக்கா, அலோர் கஜா, தாமன் பயா ரும்புட் இந்தா- வைச் சேர்ந்த அந்நபர். மாநகரிலிருந்து லிம்பொங்கன் - ஐ நோக்கி, சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று மலாக்கா தெங்க- மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.

மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த நபரின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஏசிபி கிறிஸ்டோபர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை