Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜப்பானியப் பெண் மாடி வீட்டிலிருந்து விழுந்து மரணம்

Share:

சுபாங் ஜெயா, மார்ச்.01-

சுபாங் ஜெயா, SS 16 இல் உள்ள ஒரு கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்த ஜப்பானியப் பெண், உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று காலை 8 மணியளவில் நிகழ்ந்தது.

50 வயது மதிக்கத்தக்க ஜப்பானியப் பெண் தலையில் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் தொடர்பாக காலை 8.07 மணியளவில் MERS 99 ஓர் அவசர அழைப்பைப் பெற்றது.

சம்பவ இடத்திற்கு முதலில் விரைந்த ரோந்துப் போலீசார் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றத்தன்மை நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. சம்பந்தப்பட்ட ஜப்பானிய மாது கடந்த 14 ஆண்டு காலமாக மலேசியாவில் தனது கணவருடன் வசித்து வந்ததாக அறியப்படுகிறது என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு