Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

Share:

ஷா ஆலாம், ஜனவரி.19-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தனது இரண்டு மாதப் பெண் குழந்தையைத் தரைத் தளத்தில் வீசி அதன் இறப்பிற்குக் காரணமாக இருந்த முகமட் டேனியல் இமான் முகமட் ஷெரீப் என்பவருக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

2022 ஆம் ஆண்டு ஜூலையில் ரவாங், பண்டார் தாசிக் புத்திரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் நடந்ததாக அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான மோதலால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது ஆத்திரத்தைக் குழந்தையிடம் காட்டியுள்ளார்.

குழந்தையின் உதட்டில் ரத்தம் வருவதையும், மூச்சு விட சிரமப்படுவதையும் பார்த்த தாய் பதறியுள்ளார். அப்போது குழந்தை தவறி விழுந்து மேசையில் மோதியதாகத் தந்தை பொய் கூறியுள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டானதால் குழந்தை உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு