சேய்ன் ராயன் அப்துல் மாட்டின் கொலை வழக்கில், குற்றவாளி நெருங்க உதவும் ஆதாரங்களை காவல் துறை கண்டெடுத்துள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
சேய்ன் ராயன் வீடு அமைந்திருக்கும் அப்பார்ட்மென் இடாமானின் ப்லோக் ஆர் இல் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் 2வது முறை சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவை கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இருப்பினும், கிடைக்கப்பெற்ற புதிய ஆதாரங்களை கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இறுதி முடிவு தெரிய வரும் என்றார்.







