Mar 18, 2026
Thisaigal NewsYouTube
திடீரென்று கார் தீப் பிடித்துக் கொண்டதில் ஆடவர் உயிர் தப்பினார்
தற்போதைய செய்திகள்

திடீரென்று கார் தீப் பிடித்துக் கொண்டதில் ஆடவர் உயிர் தப்பினார்

Share:

கோல பிலா, அக்டோபர்.31-

நெகிரி செம்பிலான், கோல பிலா, ஜாலான் செலாருவில் இருந்து தம்பினை நோக்கிச் சென்ற கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென்று தீப்பிடித்துக் கொண்டதில் காரின் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் நிகழ்ந்தது. இதில் 32 வயது சியே வீ காங் என்ற நபர் உயிர் தப்பினார். தாம் சீனக் கோவிலுக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமது டொயோட்டா லெக்சஸ் காரில் திடீரென்று குளிர்சாதனம், செயல்படாமல் உஷ்ணக் காற்று வெளியேறிக் கொண்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார். சாலையோரத்தில் காரை நிறுத்திய பின்னர், இயந்திரத்தை மீண்டும் முடுக்கி விட முற்பட்ட வேளையில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து புகைவரத் தொடங்கிய அடுத்த வினாடியே கார் தீப்பிடித்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதிர்ஷ்டவசமாக மின்னல் வேகத்தில் காரின் கதவைத் திறந்து கொண்டு தாம் வெளியேறி விட்டதாக அந்த கார் ஓட்டுநர் தெரிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை