May 24, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச நிறுவனம் விசாரிக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

வங்காளதேச நிறுவனம் விசாரிக்கப்படுகிறது

Share:

பாங்கி , செப்டம்பர் 26-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் நிகழ்ந்த மிகப்பெரிய செட்டிங் மோசடியைத் தொடர்ந்து அதன் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணை, முடிவுறும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த செட்டிங் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் மலேசியாவில் உள்ள வங்காளதேச நிறுவனம், தற்போது விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த 50 அதிகாரிகளிடம் விசாரணை நடத்ப்பட்டு விட்டது. இந்த விசாரணை கொள்கை அளவில் முடிந்து விட்டது.


இதன் பின்னணியில் செயல்பட்டவர்களின் வாக்குமூலம் மீதான விசாரணை அறிக்கை தயாராகிக்கொண்டு இருக்கிறது. அதேவேளையில் இதில் சம்பந்தப்பட்டுள்ள ஒரு வங்காளதேசி நிறுவனத்தின் மீது தற்போது முழு வீச்சில் விசாரணை நடைபெற்று வருவதாக ஆசம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News