Feb 16, 2026
Thisaigal NewsYouTube
1.1 பில்லியன் ரிங்கிட் அரசு ஒப்பந்தம்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை
தற்போதைய செய்திகள்

1.1 பில்லியன் ரிங்கிட் அரசு ஒப்பந்தம்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.16-

அரசாங்கத்திற்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கும் இடையே கையெழுத்தான சுமார் 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தம் மிகவும் "அவசரமாகவும்", அரசாங்கத்திற்குச் சாதகமற்ற முறையிலும் முடிக்கப்பட்டதாகச் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த ஒப்பந்தத்திற்கு நிதி அமைச்சு மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு ஆகியவற்றின் முறையான ஒப்புதல் பெறப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி, இந்த ஒப்பந்தம் தொடர்பான பல முக்கிய ஆவணங்களை பொருளாதார அமைச்சிடமிருந்து எஸ்பிஆர்எம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து எஸ்பிஆர்எம் செயல்பாட்டு துணை தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி யாஹ்யா தொடர்பு கொண்டு கேட்ட போது, விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தினார். இருப்பினும், மேலதிக விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

Related News

2025 ஆம் ஆண்டில் கெடா மாநிலத்தில் 46 லட்சம் ரிங்கிட் ரஹ்மா விற்பனை

2025 ஆம் ஆண்டில் கெடா மாநிலத்தில் 46 லட்சம் ரிங்கிட் ரஹ்மா விற்பனை

நிபந்தனைகளுடன் ஹம்ஸா மீண்டும் அம்னோவில் இணையலாம்: புவாட் ஜார்காஷி கூறுகிறார்

நிபந்தனைகளுடன் ஹம்ஸா மீண்டும் அம்னோவில் இணையலாம்: புவாட் ஜார்காஷி கூறுகிறார்

கருத்து வேறுபாடுகள் நம்மைப் பலப்படுத்த வேண்டுமே தவிர, பிரிக்கக்கூடாது: பிரதமர் அன்வார்

கருத்து வேறுபாடுகள் நம்மைப் பலப்படுத்த வேண்டுமே தவிர, பிரிக்கக்கூடாது: பிரதமர் அன்வார்

சீனப் புத்தாண்டு: பெரும்பாலான மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சீனப் புத்தாண்டு: பெரும்பாலான மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

2025-ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் லாப ஈவு 6.3% முதல் 6.5% வரை இருக்கலாம்: பொருளாதார நிபுணர் கணிப்பு

2025-ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் லாப ஈவு 6.3% முதல் 6.5% வரை இருக்கலாம்: பொருளாதார நிபுணர் கணிப்பு

அனுமதியற்ற இந்து ஆலயங்களை அகற்ற 6 மாத காலத் தடை கோரிக்கை: தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு அரசுக்கு வேண்டுகோள்

அனுமதியற்ற இந்து ஆலயங்களை அகற்ற 6 மாத காலத் தடை கோரிக்கை: தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு அரசுக்கு வேண்டுகோள்

1.1 பில்லியன் ரிங்கட் அரசு ஒப்பந்தம்: மலேசிய ஊழல் தடுப்பு... | Thisaigal News