ஜொகூர், புத்ரி ஹார்போரில் முதலைகள் இருப்பதை கண்டறிந்து அப்பகுதிற்கு வரும் சுற்றுப்பயணிகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
சுற்றுப்பயணியாளரான மர்யாம் கூறுகையில்,புத்ரி ஹார்போரில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகளில் முதலையை பார்க்க முடிந்ததாகவும் இதனால் அவ்விடத்திற்கு வருவதை தவிர்த்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இவை சுற்றுப்பயணிகளுக்கு அச்சுருத்துவதும் மட்டுமில்லாமல் வார இறுதியில் அவ்விடத்திற்கு பொழுது போக்கினை கழிக்க வருபவர்களுக்கு பாதிப்பை விளைவிப்பதாகவும் அவர் கூறினார்.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை, சர்வதேச படகு முனையத்தை கொண்டுள்ள புத்ரி ஹார்போர் நிர்வாகம் விரைவில் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மர்யாம் கேட்டு கொண்டார்.








