பினாங்கு பாலத்திலிருந்து கடலில் குதித்த பெண் ஒருவர், மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் 23 வயதுடைய அந்தப் பெண், இன்று அதிகாலை 4 மணியளவில் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட பெண், தனது காரை பாலத்தின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, தமக்கு சொந்தமான ஆவணங்களை காரிலேயே கைவிட்டு பாலத்தில் குதித்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்து அந்த பாலத்தின் 7.4 ஆவது கிலோமீட்டரில் பிறையை நோக்கி தீயணைப்புப்படையினர் விரைந்தனர். எனினும் கடலில் அவ்வழியே வந்து கொண்டிருந்த மீனவர்கள், நீரில் தத்தளித்துக்கொண்டு இருந்த அந்தப் பெண்ணை மீட்டு காப்பாற்றியுள்ளனர் என்று தீயணைப்பு, மீட்புப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


