பினாங்கு பாலத்திலிருந்து கடலில் குதித்த பெண் ஒருவர், மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் 23 வயதுடைய அந்தப் பெண், இன்று அதிகாலை 4 மணியளவில் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட பெண், தனது காரை பாலத்தின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, தமக்கு சொந்தமான ஆவணங்களை காரிலேயே கைவிட்டு பாலத்தில் குதித்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்து அந்த பாலத்தின் 7.4 ஆவது கிலோமீட்டரில் பிறையை நோக்கி தீயணைப்புப்படையினர் விரைந்தனர். எனினும் கடலில் அவ்வழியே வந்து கொண்டிருந்த மீனவர்கள், நீரில் தத்தளித்துக்கொண்டு இருந்த அந்தப் பெண்ணை மீட்டு காப்பாற்றியுள்ளனர் என்று தீயணைப்பு, மீட்புப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


