பினாங்கு பாலத்திலிருந்து கடலில் குதித்த பெண் ஒருவர், மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் 23 வயதுடைய அந்தப் பெண், இன்று அதிகாலை 4 மணியளவில் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட பெண், தனது காரை பாலத்தின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, தமக்கு சொந்தமான ஆவணங்களை காரிலேயே கைவிட்டு பாலத்தில் குதித்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்து அந்த பாலத்தின் 7.4 ஆவது கிலோமீட்டரில் பிறையை நோக்கி தீயணைப்புப்படையினர் விரைந்தனர். எனினும் கடலில் அவ்வழியே வந்து கொண்டிருந்த மீனவர்கள், நீரில் தத்தளித்துக்கொண்டு இருந்த அந்தப் பெண்ணை மீட்டு காப்பாற்றியுள்ளனர் என்று தீயணைப்பு, மீட்புப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது


