பினாங்கு பாலத்திலிருந்து கடலில் குதித்த பெண் ஒருவர், மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் 23 வயதுடைய அந்தப் பெண், இன்று அதிகாலை 4 மணியளவில் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட பெண், தனது காரை பாலத்தின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, தமக்கு சொந்தமான ஆவணங்களை காரிலேயே கைவிட்டு பாலத்தில் குதித்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்து அந்த பாலத்தின் 7.4 ஆவது கிலோமீட்டரில் பிறையை நோக்கி தீயணைப்புப்படையினர் விரைந்தனர். எனினும் கடலில் அவ்வழியே வந்து கொண்டிருந்த மீனவர்கள், நீரில் தத்தளித்துக்கொண்டு இருந்த அந்தப் பெண்ணை மீட்டு காப்பாற்றியுள்ளனர் என்று தீயணைப்பு, மீட்புப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


