Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வக்கிரச் செயல், அந்த மருத்துவர் ஜாமீனில் விடுவிப்பு

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.03

மருத்துவமனையின் தனியறையில் இளம் பெண் நோயாளியை ஆடை களையச் செய்து, வக்கிரச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மருத்துவர் ஒருவர், விசாரணைக்குப் பிறகு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பினாங்கு ஜார்ஜ்டவுனில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்ததாக கூறப்படும் இந்த ஆபாச சேட்டை தொடர்பில் ஓர் அரசாங்க ஊழியரான 43 வயதுடைய அந்த மருத்துவர் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நான்கு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

உதவி பெண் தாதியரின்றி, 20 மதிக்கத்தக்க பெண்ணை அந்த மருத்துவர் ஆடையைக் களையச் செய்த போது, மருத்துவ நடைமுறைகளில் ஒன்று என கருதி, அந்த பெண் நோயாளி அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மருத்துவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னதாக விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் லீ சுவீ சாகே தெரிவித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு