Mar 10, 2026
Thisaigal NewsYouTube
​மூன்று வாகனங்கள் சம்பந்தப்ப்டட விபத்தில் ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

​மூன்று வாகனங்கள் சம்பந்தப்ப்டட விபத்தில் ஆடவர் பலி

Share:

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தொன்​றில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார். இவ்விபத்து நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஜாலான் காராக் - குவாலா பிலாஹ் சாலையின் 19 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

இதில் 33 வயது எஸ். விவேகானந்தன் என்பவர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெந்தோங் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிந்தென்டன் சைஹம் முஹமாட் முஹமாட் காஹார் தெரிவித்தார்.மோட்டார் சைக்கிளோட்டி, எம்பிவி வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது ஃபோர்-வீல் டிரைவ் வாகனத்தில் மோதி ​தூக்கி எறியப்பட்ட நிலையில் அவரை, எம்பிவி வாகனம் மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளோட்டி விவேகானந்தன், தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்த வேளையில் இதர இரண்டு வாகமோட்டிகள் காயமின்றி உயிர்​ தப்பியதாக சைஹாம் முஹமாட் காஹார் குறிப்பிட்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு