நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நாளை வியாழக்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளவிருக்கும் வேளையில் பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களில் அம்னோவிற்கு நான்கு இடங்களும் , பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆறு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது முதல் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் ஆட்சி நிறுவப்படுவதில் நிலவி வந்த முட்டுக்கட்டைகள் அகற்றப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில ஆட்சிக்குழுவில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் டிஏபி க்கு 4 இடங்களும், பிகேஆர் க்கு இரண்டு இடங்களும், அமானாவிற்கு சட்டமன்ற சபா நாயர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


