எதிர்வரும் நோன்புப்பெருநாள் கொண்டாட்டத் தேதியைத் தீர்மானிப்பதற்கான ஷவ்வால் மாதப் பிறை பார்க்கும் நிகழ்வு, மார்ச் 19-ஆம் தேதி நாடு முழுவதும் 29 இடங்களில் நடைபெறும் என்று மாமன்னரின் முத்திரைக்காப்பாளர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
அன்றிரவு பிறை தென்படுகிறதா என்பதைப் பொறுத்து, நோன்புப்பொருநாள் கொண்டாடப்படும் தேதியை மாமன்னரின் முத்திரைக்காப்பாளர் வானொலி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
இஸ்லாமிய முறைப்படி, ' rukyah' மற்றும் ' hisab' ஆகிய இரண்டு முறைகளையும் பின்பற்றி பெருநாள் தேதியைத் தீர்மானிக்க ஆட்சியாளர் பேரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








