பெத்தாலிங் ஜெயா,ஜன.9
மலேசியாவில் வேலை செய்து வருகின்ற அந்நிய நாட்டு த்தொழிலாளர்களுக்காக விபச்சார மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பிரபல உள்ளூர் நடிகர் ரொஷாம் நோர், இன்று பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
தாம் வெளியிட்ட அறிக்கை உள்ளார்ந்த அர்த்தம் பொதித்தது என்றாலும் அந்த அறிக்கையினால் பல்வேறு தரப்பினரிடமிருந்து தாம் கடும் கண்டனக்குரல்களுக்கு ஆளாகிய வருவதாக ரொஷாம் நோர் குறிப்பிட்டார்.
விபச்சார மையங்கள் தொடர்பாக தாம் வெளியிட்ட காணொளியை முழுமையாக பார்த்து விட்டு ஒரு மதிப்பீடு செய்யுமாறு முஹமாட் நோர் சம்சுடின் என்ற இயற்பெயர் கொண்ட 57 வயதுடைய ரொஷாம் நோர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.








