கோலாலம்பூர்,ஜன.19
விரைவு பேருந்தும், காரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமுற்றார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் கிளந்தான், ரந்தாவ் பஞ்ஞாங், ஜாலான் பஞ்ஞாங் - பாசிர் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இவ்விபத்தில் பேருந்து ஓட்டுநர், கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக மீட்புப்பணிக்கு தலைமையேற்ற , ரந்தாவ் பஞ்ஞாங் தீயணைப்பு நிலைய கொமான்டர், அஸ்மி ஜாஃபார் தெரிவித்தார்.
ஒன்பது பேர் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் ஐவர் உயிரிதப்பினர். வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டவர்களின் உடல்களை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.








