Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தம்மை நீக்குவதற்கு வெளிப்படையாக சதி நடக்கிறதா? அப்படி சொல்லவில்லை என்கிறார் பினாங்கு முதல்வர் சொவ் கொன் யொ
தற்போதைய செய்திகள்

தம்மை நீக்குவதற்கு வெளிப்படையாக சதி நடக்கிறதா? அப்படி சொல்லவில்லை என்கிறார் பினாங்கு முதல்வர் சொவ் கொன் யொ

Share:

பினாங்கு முதலமைச்சர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கு வெளிப்படையாக சதி நடக்கிறது என்று தாம் சொல்லவில்லை என்று மாநில முதல்வர் சொவ் கொன் யொ
விளக்கம் அளித்துள்ளார்.

பினாங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு நடந்த சில விஷயங்களை மேற்கோள்காட்டி ஓர் உவமையாக சொன்னது உண்டு என்றும், ஆனால், அந்த சதி வெளிப்படையாக நடக்கிறது என்று சொல்லவில்லை என்றும் சொவ் கொன் யொ திடீர் பல்டி அடித்துள்ளார்.

முதலமைச்சர் பதவியிலிருந்து தம்மை கவிழ்ப்பதற்கு சதி நடப்பதாக கடந்த வாரம் இறுதியில் பேசியிருந்த சொவ் கொன் யொ, அந்த குற்றச்சாட்டை மறுத்த நிலையில் தாம் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று மழுப்பியுள்ளார்.

உண்மையிலேயே சொவ் கொன் யொ வை நீக்குவதற்கு டிஏபி கட்சிக்குள்ளும், அதற்கு வெளியேவும் சதி நடக்கிறது என்றால் அதற்கான ஆதாரங்களை அவர் நிருபிக்க வேண்டும் என்று கட்சியின் தேசியத் தலைவர் லிம் குவான் எங் விடுத்துள்ள சவாலைத் தொடர்ந்து சொவ் கொன் யொ இன்று பின்வாங்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு