Apr 20, 2026
Thisaigal NewsYouTube
லங்காவி படகு சேவைக் குறைப்பு : பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண அரசுக்கு கோரிக்கை
தற்போதைய செய்திகள்

லங்காவி படகு சேவைக் குறைப்பு : பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண அரசுக்கு கோரிக்கை

Share:

லங்காவிக்கு செல்லும் படகு சேவைகள் குறைக்கப்பட்டுள்ள பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என அரசு சாரா இயக்கம் ஒன்றில் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த குறைப்பு சுற்றுலா துறையை பாதிப்பதுடன், அங்குள்ள மக்களின் தினசரி வாழ்க்கையையும் சீர்குலைக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 25 -ஆம் தேதி முதல் எரிபொருள் செலவு அதிகரிப்பு காரணமாக தினசரி ஐந்து படகு சேவைகள் மூன்றாக குறைக்கப்பட்டதால், லங்காவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அனாக் மூடா மடாணி கெடா மாநில தலைவர் ஜுரைடி ரஹீம் தெரிவித்துள்ளார்.

இதனால், சுற்றுலாவை நம்பி வாழும் லங்காவி மக்களும், குறிப்பாக சிறு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை மேலும் ஒன்றிரண்டு மாதங்கள் நீடித்தால், தீவின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

Related News