Aug 2, 2026
Thisaigal NewsYouTube
புலியை மோதிய ஆடவருக்குக் காயம் !
தற்போதைய செய்திகள்

புலியை மோதிய ஆடவருக்குக் காயம் !

Share:

நேற்றிரவு குவா மூசாங் பகுதியில் ஜாலான் குவா முசாங்-ஜெலியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது புலி மீது மோதியதாக நம்பப்பட்ட ஆடவருக்கு முகம், கால்களில் காயம் ஏற்பட்டது.

தோட்ட உரிமையாளரான 26 வயது முஹமாட் சுல்ஹில்மி மொக்தார் கூறுகையில், இரவு 9.30 மணியளவில் திடீரென சாலையின் வலது பக்கத்தில் உள்ள புதருக்குள் இருந்து வெளியே வந்த புலி ஒன்று தாம் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தில் மோதியது எனக் குறிப்பிட்டார்.

விழுந்த முஹமாட் சுல்ஹில்மி உடனடியாக எழுந்து ஏறத்தாழ 100 மீட்டர் தூரம் ஓடிச் சென்று அவ்வழியே வரும் மற்ற சாலைப் பயனரிடம் உதவி கேட்க முடிற்சித்துள்ளார். அந்த வழியாக வந்த ஒருவரின் உதவியுடன் சம்பவ இடத்தைக் கடந்து குவா மூசாங் மருத்துவமனையை அடைந்திருக்கிறார் முஹமாட் சுல்ஹில்மி.

அந்தப் புலி சாலையை கடந்த வந்ததா அல்லது தன்னைத் தாக்க வந்ததா எனத் தெரியவில்லை என்றும் கூறினார் எம் முஹமாட் சுல்ஹில்மி.

இதனிடையே, இந்த விபத்து குறித்து கிளாந்தான் மாநில வனவிலங்கு பாத்காப்பு, தேசியப் பூங்கா இலாகாவான பெர்ஹிலிதான்னுக்குத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் இயக்குநர் முஹமாட் ஹாஃபிட் ரொஹானி தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்குத் தமது தரப்பு சென்றதாகவும் விசாரணை மேற்கொள்ளபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு