Aug 6, 2026
Thisaigal NewsYouTube
வி. தம்ராஜ்ஜிற்கு துணைப்பிரதமர் பாராட்டு
தற்போதைய செய்திகள்

வி. தம்ராஜ்ஜிற்கு துணைப்பிரதமர் பாராட்டு

Share:

கோலாலம்பூர், டிச. 23-


ஐக்கிய அரபு சிற்றரவு, அபுதாபியில் நடைபெற்ற உலக அளவிலான 20 ஆவது பென்சாக் சீலாட் சாம்பியன்ஷிப் தற்காப்புப்போட்டியில் சுயேட்சைப்பிரிவில் மலேசிய சீலாட் தற்காப்புக்கலை வீரர் வி. தம்ராஜ், தங்கத்தை வென்று வரலாறு படைத்து இருப்பது துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

உலகளாவிய நிலையில் நடைபெற்ற பென்சாக் சீலாட் சாம்பியன்ஷிப் தற்காப்பு கலைப்போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து, பங்கேற்று, வெற்றி வாகை சூடிய இந்திய சமூகத்தைச் சேர்ந்த முதலாவது விளையாட்டளராக தம்ராஜ் விளங்குகிறார் என்று துணைப் பிரதமர் புகழ்மாலை சூடினார்.

நேற்று முடிவடைந்த இந்த உலகாளவிய பென்சாக் சீலாட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் குடோய்பெர்டிவ் டியோபெக்கை வீழ்த்தி, தம்ராஜ் மலேசியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

இந்த உலகளாவியப் போட்டியில் மலேசிய வீரர்கள் 6 தங்கம், ஒன்பது வெள்ளி, நான்கு வெண்கலப்பதக்கங்களை வென்று இருப்பது மூலம் மலேசியாவைக அனைத்துலக விளையாட்டு அரங்கில் சிறக்க வைத்து, பெருமை சேர்ந்துள்ளனர் என்று துணைப்பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

Related News