May 6, 2026
Thisaigal NewsYouTube
இந்திராகாந்தியின் முன்னாள் கணவரைக் கண்டுபிடிக்க தனியார் புலனாய்வுப் பிரிவு நியமிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

இந்திராகாந்தியின் முன்னாள் கணவரைக் கண்டுபிடிக்க தனியார் புலனாய்வுப் பிரிவு நியமிக்கப்படும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.25-

ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியரான எம். இந்திராகாந்தியின் முன்னாள் கணவரையும், நீண்ட காலமாக காணாமல் போன அவரின் மகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் தனியார் புலனாய்வுச் சேவை பெறப்பட்டுள்ளதாக கெராக்கான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ நரன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் கே. பத்மநாபன் என்ற முகமட் ரிதுவான் அப்துல்லா இன்னமும் மலேசியாவில்தான் பதுங்கியிருக்கிறார் என்பது தெரிய வந்ததைத் தொடர்நது தனியார் துப்பறிவாளர் சேவையை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஒரு வழக்கறிஞரான டத்தோ நரன் சிங் குறிப்பிட்டார்.

அவர்கள் இருக்கும் இடத்தைத் திட்டவட்டமாகக் கூற முடியாவிட்டாலும் அனுமானமாகச் சொல்ல முடியும், அதனை இப்போது வெளியிட முடியாது என்று நரன் சிங் குறிப்பிட்டார்.

இந்திராகாந்தியின் மகள் பிரசன்னா டிக்‌ஷாவை மீட்கும் அளவிற்கு தனியார் துப்பறிவாளர் சேவை இன்றியமையாததாகத் தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்