Dec 3, 2025
Thisaigal NewsYouTube
'கவுண்டர் செட்டிங்' ஊழலில் அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கம்! 9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்கம், கார் ஆகியன பறிமுதல்!
தற்போதைய செய்திகள்

'கவுண்டர் செட்டிங்' ஊழலில் அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கம்! 9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்கம், கார் ஆகியன பறிமுதல்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.28-

மலேசிய எல்லைப் பகுதிகளில் நடந்த 'கவுண்டர் செட்டிங்' ஊழல் மோசடி தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் – எஸ்பிஆர்எம், அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தச் சிண்டிகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

அவர்களிடம் இருந்து 9 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம், ஆடம்பர வாகனங்கள், ரொக்கம், வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகள், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் கிடைத்த பணத்தைக் கொண்டு தங்கக் கடைகளையும் தொடங்கியதும், பினாமி கணக்குகளைப் பயன்படுத்தியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 18 அதிகாரிகள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்