Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தேசியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டி இல்லை ! - பேரா மாநில ம.இ.கா.
தற்போதைய செய்திகள்

தேசியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டி இல்லை ! - பேரா மாநில ம.இ.கா.

Share:

2024 க்கான மஇகா தேர்தலில் தேசியத் தலைவர், துணைத் தலைவர் ஆகியப் பதவிகளுக்குப் போட்டி இல்லை என்று பேரா மாநில ம.இ.கா.வின் 77வது பேராளர் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பகாங் ம.இ.கா.வைத் தொடர்ந்து பேரா மாநிலமும் இந்த முடிவை எடுத்துள்ளதை தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மு சரபணன் உறுதிப்படுத்தினார்.

பேரா மாநில ம.இ.கா.வின் தலைவர் டத்தோ வீ இளங்கோவின் முழு ஆதரவுக்குத் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் டத்தோ ஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

இதுவரை தலைவருக்கானப் போட்டி இருப்பதாகத் தெரியவில்லை. , துணைத் தலைவர், உதவித் தலைவர் அனைவரும் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு ஆதரவளிக்கிறார்கள், ஆகையால் அவர் தொடர்ந்து மஇகா தலைவராக நீடிப்பார். மேலும் அவரது முயற்சிகளுக்கும் திட்டங்களுக்கும் கட்சி உறுப்பினர்கள் பக்கபலமாக இருப்பதோடு கட்சியின் இரட்டைக் கட்டடத்தை கூடிய விரைவில் கட்டி முடிப்பதில் முழு வீச்சில் இறங்கி இருப்பதாக சரவணன் தெரிவித்தார்.

முன்னதாக, 2024 ஆம் ஆண்டுக்கான தேசியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டி இல்லை எனும் தீர்மானத்தை பகாங் மாநில ம.இ.கா. தலைவர் வி. ஆறுமுகம் கொண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு