Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா மதச்சார்பற்ற நாடாக மாற வழியே இல்லை
தற்போதைய செய்திகள்

மலேசியா மதச்சார்பற்ற நாடாக மாற வழியே இல்லை

Share:

மலேசியா மதச்சார்பற்ற நாடாக மாறுவதற்கு வழியே இல்லை என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய சமயத்திலிருந்து மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை பிரிப்பதற்கு
ஒற்றுமை அரசாங்கம், இந்த நாட்டை மதச்சார்பற்ற நாடாக மாற்றும் நோக்கில் செயல்படுகிறது என்று பாஸ் கட்சித் தலைவர்கள் கூறுவது வெறும் புரளி என்று அஷ்ராஃப் வஜ்டி கூறினார்.

தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டதாகும்.

பாஸ் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டுவதைப் போல மலேசியாவை மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது என்றால் அதனை அம்னோ முழு வீச்சில் எதிர்க்கும் என்று அவர் குறிப்பிட்ட்டார்.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதமாக நிலைநிறுத்தப்படும். அப்படியே மலேசியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்ற வேண்டுமானால் அச்சட்டத்தின்படி ​மூன்றாவது விதிமுறையை திருத்த வேண்டும். அவ்வாறு திருத்துவது என்பது சாத்தியமே இல்லை என்று அஷ்ராஃப் வஜ்டி விளக்கினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!