லஞ்சம் ஊழல் தொடர்பில், முன்னாள் நீதிபதியும், ஒரு போலீஸ்காரரும் இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.|
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில், ஈப்போ, தாமான் தாசேக் முதியாரா, ஜாலான் கோலக் கங்சாரில் உள்ள ஓர் உணவகத்தில், சிரியா நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான 43 வயதுடைய புர்ஹனுடின் இஸ்மி அடாமும், லான்ஸ் கார்போரல் அந்தஸ்தைக் கொண்ட 34 வயதுடைய முகமட் ஹம்ரி அயோப்பும், கல்வாட் வழக்கு தொடர்பில் 4 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக அவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


