Aug 6, 2026
Thisaigal NewsYouTube
1எம்டிபி வழக்கில் நஜீப், அருள்கந்தா விடுதலை
தற்போதைய செய்திகள்

1எம்டிபி வழக்கில் நஜீப், அருள்கந்தா விடுதலை

Share:
1 மலேசியா டெவலப்மென் பெர்ஹாட் எனப்படும் 1எம்டிபி நிறுவனத்தின் ஆகக்கடைசியான கணக்கறிக்கை தணிக்கையின் விவரங்களை அழித்தல், திருத்தல் என பல மாற்றங்களை செய்து, உண்மையான கணக்கு விவரங்களை போல் மூடி மறைத்ததாக கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும், அந்த நிதி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமியும் விடுதலை செய்யப்பட்டதைத் அப்​பீல் ​நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.இ​வ்விருவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அவர்களின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த காலகட்டத்திற்குள் அப்பீல் மனுவை தாக்கல் செய்ய பிராசியூஷன் தரப்பு தவறிவிட்டதாக ​மூவர் அடங்கிய ​நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் ​​நீதிமன்ற நீதிபதி தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.மேல்முறையீட்டை பதிவு செய்த ஜுலை 6 ஆம் தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் அதற்கான ஆவணங்கள் ​நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அந்த காலகட்டத்திற்குள் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யதற்கு பிராசிகியூஷன் தவறிவிட்டதாக ​நீதிபதி குறிப்பிட்டார்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்